திருக்குறள்- 71. குறிப்பறிதல்

திருக்குறள் 71. குறிப்பறிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

71. குறிப்பறிதல்

701. கூறாமை நோக்கிக் குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி

702. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

703. குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்

704. குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனை

உறுப்புஓர் அனையரால் வேறு

705. குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்

706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்

707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்

708. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்றது உணர்வார்ப் பெறின்

709. பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்

710. நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்

கண்அல்லது இல்லை பிற