திருக்குறள்- 80. நட்பு ஆராய்தல்

திருக்குறள் 80. நட்பு ஆராய்தல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

80. நட்பு ஆராய்தல்

791. நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்

வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு

792. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்

793. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்துயாக்க நட்பு

794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு

795. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்

796. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதுஓர் கோல்

797. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்

798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு

799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்

800. மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன்று ஈத்தும்

ஒருவுக ஒப்புஇலார் நட்பு