திருக்குறள்- 87. பகை மாட்சி

திருக்குறள் 87. பகை மாட்சி அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

87. பகை மாட்சி

861. வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை

862. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு

863. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு

864. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது

865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு இனிது

866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்

867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து

மாணாத செய்வான் பகை

868. குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு

இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து

869. செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்

870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லாது ஒளி