திருக்குறள்- 89. உட்பகை

திருக்குறள் 89. உட்பகை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

89. உட்பகை

881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாஆம் இன்னா செயின்

882. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு

883. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்

884. மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா

ஏதம் பலவும் தரும்

885. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்

886. ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது

887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி

888. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி

889. எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளது ஆம் கேடு

890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடன்உறைந் தற்று