திருக்குறள்- 93. கள்ளுண்ணாமை

திருக்குறள் 93. கள்ளுண்ணாமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

93. கள்ளுண்ணாமை

921. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

கள்காதல் கொண்டுஒழுகு வார்

922. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்

923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி

924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

925. கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்

926. துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுஉண்பார் கள்உண் பவர்

927. உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ஒற்றிக் கண்சாய் பவர்

928. களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று

930. கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு