திருக்குறள்- 97. மானம்

திருக்குறள் 97. மானம் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

97. மானம்

961. இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்

962. சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்

963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு

964. தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை

965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்

966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை

967. ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று

968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடுஅழிய வந்த இடத்து

969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

970. இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு