திருக்குறள்- 105. நல்குரவு

திருக்குறள் 105. நல்குரவு அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

105. நல்குரவு

1041. இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்

இன்மையே இன்னா தது

1042. இன்மை எனஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்

1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை

1044. இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொல்பிறக்கும் சோர்வு தரும்

1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்

1046. நன்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்

1047. அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்

1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு

1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது

1050. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று