திருக்குறள்- 110. குறிப்பறிதல்

திருக்குறள் 110. குறிப்பறிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

காமத்துப்பால்

110. குறிப்பறிதல்

1091. இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து

1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது

1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள்

யாப்பினுள் அட்டிய நீர்

1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்

1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தான் போல நகும்

1096. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்

1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு

1098. அசையியற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்

1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள

1100. கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல