குறுந்தொகை: பாடல் 268
குறுந்தொகை 268 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''சேறிரோ?'' எனச் செப்பலும் ஆற்றாம்;
''வருவிரோ?'' என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து,
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கருவூர்ச் சேரமான் சாத்தன்
பை - படம்
துமிக்கும் - அறுக்கும், துண்டாக்கும்
ஏறு - இடி,உருமு,உரும்
கடும் பாம்பு வழங்கும் தெரு(354:5)
பையுடை இருந் தலை துமிக்கும் ஏறு(குறுந்.269:3-4)
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய/
இடியொடு மயங்கி இனிது வீழ்ந் தன்றே(குறுந்.391:3-4)
பாஅய் பாம்பின்/பை பட இடிக்கும் கடும் குரல் ஏறு(அகம்.323:9-10)
... ...பொறிவரி/
வெஞ்சின அரவின் பைந் தலை துமிய/
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள் (குறுந்.190:3-5)
நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்/
கடு விசை உருமின் கழறு குரல்(குறுந்.158:1-2)
உத்தி அரவின் பைத் தலை துமிய,/
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,(அகம்.202:10-11)
*உத்தி-படப் பொறி
உர-வலிமை,உரும்-இடி,
உரறும்-முழங்கும்
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந் தலை துமிய,(புறம்.211:1-2)
விசும்பு வீழ் கொள்ளி யின் பைம் பயிர் துமிப்ப (குறுந்.189:4)
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய(அகம்.254:14)
song 189
• குறுந்தொகை 189 / Kurunthohai 189
நன்றி: http://tamil concordance.in
