குறுந்தொகை: பாடல் 292
குறுந்தொகை 292 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது.
பரணர்
மண்ணிய - நீராட
ஒள் நுதல் - ஒளியுடைய நெற்றி
தப்பல் - தவறு, குற்றம்
ஒன்பதிற்று ஒன்பது - 9×9=81 எண்பத்தியொன்று
நிறை - எடை
பாவை - பெண்
நகை - சிரிப்பு
வரையா - மீளவே முடியாத
செலீஇயரோ - செல்ல வேண்டும்
துஞ்சல் - தூக்கம், வருத்தம்
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ/
அழியல் வாழி தோழி நன்னன்/
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய/
ஒன்று மொழிக் கோசர் போல/
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே(குறுந்.73)
.................வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க;அதன்தலை,/
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்/
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே (புறம்.191:4-7)
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். (குறள்.567)
படுகளம் காண்டல் செல்லான், சினம் சிறந்து,/
உரு வினை நன்னன், அருளான், கரப்ப(அகம்.208:13-14)
Song 73: • குறுந்தொகை 73 / Kurunthohai 73
Song 298: • குறுந்தொகை 298 / Kurunthohai 298 #tamil #k...
Song 15: • குறுந்தொகை - 15
நன்றி : http ://tamil concordance.in
