குறுந்தொகை: பாடல் 302
குறுந்தொகை 302 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே?
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
''பிரியா நண்பினர் இருவரும்'' என்னும்
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.
உரை
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
மாங்குடி கிழார்
இசின்- அசை நிலை
புரைத்து - உயர்வுடையது
அன்றே(அன்று+ஏ) - ஆகாது
அன்னோ - இரக்கக் குறிப்பு
ஊர் - ஊரார்(ஆகுபெயர்)
பெரும் பிறிது உற்றென (குறுந்.69:1)
மெய் பிறிதாகுதல் (குறுந்.195:8)
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே(குறுந்.138:1)
நனம் தலை உலகமும் துஞ்சும்/ஓர் யான் மன்ற துஞ்சாதேனே(குறுந்.6:3-4)
அஞ்சு வரு நோயொடு துஞ்சாதேனே(அகம்.49:15)
அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.(குறள்.1141)
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.(குறள்.1148)
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?/
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,/
'ஆஅ! ஒல்'எனக் கூவு வேன் கொல்?-/
அலமரல் அசைவளி அலைப்ப என்/
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.(குறுந்.28)
குறுந்தொகை 69: • குறுந்தொகை 69 / Kurunthohai 69
குறுந்தொகை 195: • குறுந்தொகை 195 / Kurunthohai 195
