குறுந்தொகை: பாடல் 399

குறுந்தொகை 399 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க

பாசி அற்றே பசலை-காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி,

விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பரணர்

ஊர் - மக்கள் (ஆகுபெயர்)

கேணி - சிறு குளம்,ஊருணி

அற்றே - உவம உருபு

தொடுவுழி (தொடு+உழி) - (உழி 7ஆம் வேற்றுமை உருபு) தொடும் பொழுது

விடுவுழி (விடு+உழி) - விடும் பொழுது

பரத்தல் - பரவுதல்,பரவி நிற்றல்

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.(குறள்.1183)

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்புஊர் வது.(குறள்.1185)

விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு.(குறள்.1186)

அயல் இல் பெண்டிர் பசலை பாட (நற்.378:7)

தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே (கலி.130:21)

பழ நலம் இழந்து பசலை பாய (நற்.219:2)

அணி நலம் சிதைக்குமோர் பசலை (நற்.304:7)

முயங் காக் கால் பாயும் பசலை (நாலடி.40:1:1)

பசலை பாய்ந்த மேனியள் (அகம் 169:9)

மேனி மறைத்த பசலையள் (கலி.143:6)

நுதல் கவின் அழிக்கும் பசலை (நற்.73:10)

ஒண் நுதல் பசலை (அகம்.251:2)

பசலை பாய் தரு நுதல் (நற்.368:7)

பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே (குறுந்.13:5)

பனி மலர் நெடுங் கண் பசலை பாய (ஐங்.477:1)

குறுந்தொகை 41 / Kurunthohai 41

குறுந்தொகை 98 / Kurunthohai 98

நன்றி - http ://tamil concordance.in