குறுந்தொகை: பாடல் 382

குறுந்தொகை 382 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை

முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்

பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,

வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,

கார் இது பருவம் ஆயின்,

வாராரோ, நம் காதலோரே?

பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று; வம்பு'' என்று வற்புறீஇயது.

குறுங்கீரன்

முகை - அரும்பு

தலை திறத்தல் - மலர்தல்

அமல் - நெருக்கம்

தளவம் - செம்முல்லை

கஞல - கஞலுதல்,செறிதல்

புதுமை - காலம் அல்லாத காலத்தில் பெய்யும் மழை

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு,/

பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்/

கதுப்பின் தோன்றும் புதுப் பூம் கொன்றைக்/

கானம் கார் எனக் கூறினும்/

யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. (குறுந்.21)

ஓதலாந்தையார்

நெடுங் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர(ஐங்.422:2)

நன்றி - http ://tamil concordance.in

குறுந்தொகை - 21 / Kurunthohai 21

குறுந்தொகை - 66 / Kurunthohai 66

குறுந்தொகை 94 / Kurunthohai 94